கோவை மத்திய சிறை வாசலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்..

கோவையில் உள்ள டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் மத்திய சிறை உள்ளது.இந்த சிறையின் நுழைவு வாசல் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து புலியகுளம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.