கோவையில் பைக் -லாரி மோதி விபத்து: தந்தை பலி-மகன் படுகாயம்…

கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38) இவர் நேற்று தனது மகன் சாகுலுடன் ( வயது 13)பைக்கில் உக்கடம் ஆத்துப்பாலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி திடீர் பிரேக் போட்டதால் இவர்கள் சென்ற பைக் லாரியின் பின்புறம் மோதியது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷாஜகான் இறந்துவிட்டார். அவரது மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக  இடுக்கி மாவட்டம் தேவிகுளம் ,மூணாறு காலணியை சேர்ந்த லாரி டிரைவர் கிறிஸ்டோபர் ( வயது 54 )மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது