ஸ்கூட்டி மீது பைக் மோதி விபத்து: தந்தை பலி-மகள் படுகாயம்..

பொள்ளாச்சி சுங்கம் அருகே உள்ள கோலார் பட்டி, தோப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 38) விவசாயி .இவர் நேற்று தனது மகள் மாலதி ( வயது 14) என்பவருடன் ஸ்கூட்டியில் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கெடிமேடு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்களது ஸ்கூட்டி மீது மோதியது. இதில் முருகன் அவரது மகள் மாலதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழியில் ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற முருகன் இறந்தார். மகள் மாலதி சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது .பிரபாகரன் பைக் ஓட்டி வந்த பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.