மாட்டு வண்டி மீது பைக் மோதி மனைவி பலி – கணவர் படுகாயம்..

கோவை தொண்டாமுத்தூர், அருகே உள்ள குப்பை பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) இவரது மனைவி புவனேஸ்வரி( வயது 25) நேற்று கணவன்- மனைவி இருவரும் பைக்கில் நரசிபுரம் -தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.வண்டிக்காரனுர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாட்டு வண்டி மீதுபைக் மோதியது..இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .வழியில் புவனேஸ்வரி இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் பிரகாஷ் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குகன் மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.