நெல்லையில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் மகாராஜன் திடீர் கைது!

நெல்லை அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் புடுங்கியதாக புகார் எழுந்தது. பல்வீர் சிங் விவகாரத்தில் பாதிக்கபட்டவர்கள் இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்களில் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட செல்லப்பா ,மாரியப்பன் மற்றும் சுபாஷ் உள்பட ஐந்து பேர் மகாராஜனை சந்தித்து பல்புடுங்கப்பட்ட விவகாரத்தை கூறியுள்ளனர். மேலும் வழக்கறிஞர் மகாராஜன் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரணம் உட்பட போலீசுக்கு எதிரான பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகின்றார்.

ஆகையால் பல் பிடுங்கிய விவாகரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உட்பட ஆறு பேரையும் அழைத்து பத்திரிகையாளர்களிடம் மேலும் பாதிக்கப்பட்ட நபர்களை பேச வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர்.பல்புடுங்கி விவாகாரம் விஸ்வரூபம் எடுத்து தற்போது சிபிசிஐடி விசாரணை வரை சென்றுள்ளது.மேலும் ஏஎஸ்பி விவாகரத்தில் நெல்லை மாவட்ட காவல்துறையினர் மகாராஜன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் கிராமத்தில் இரு பிரிவினர்களாக வசித்து வருகின்றனர். இந்த இரு பிரிவினர்களுக்கு இடையே கொடிக்கம்பம் அமைப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.ஒரு சமூகத்திற்கு சொந்தமான இடத்தில் இன்னொரு சமூகத்தினர் கம்பம் நட்டு கொடியேற்றம் செய்தனர். இதனை அறிந்த இன்னொரு சமூகத்தினர் போஸ்டர் மீது அவ மரியாதை செய்ததாக மற்றொரு சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இரு தரப்பில் இருந்தும் தொடர்ந்து அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக பிரச்சனை நிகழ்வதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லையைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சேனைப்படை அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் சேர்ந்து மேலாப்பாவூர் ஊருக்குள் செல்ல முயற்சி செய்தனர். மேலும் மகராஜன் ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே ஆதரவாக பேச சென்றதாக போலீசார் கோரி தடுத்து நிறுத்தினர்.அந்த கிராமத்தின் நுழைவுப் பகுதியில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி நீங்கள் ஊருக்குள் சென்றால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என்று கூறி நீங்கள் ஊருக்குள் செல்லக்கூடாது என்று தடை விதித்தனர்.

போலீசார் விதித்த தடையை மீறி ஊருக்குள் சென்றதால் மகாராஜன் உள்ளிட்ட ஐந்து பெயரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேதாஜி, சுபாஷ், சேனைப்படை தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் தென்காசி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற நடுவர் பொன் பாண்டியன் அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். மேலும் போலீசார் திட்டமிட்டு தான் வழக்கறிஞர் மகாராஜனை கைது செய்துள்ளதாகவும் சுபாஷ் சேனைப்பட அமைப்பினர் குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர் மகாராஜன் தான் முதல் முதலாக பல்புடுங்கிய விவாகரத்தை வெளிக்கொண்டு வந்தார் .எனவே அவர் ஏதாவது வழக்கில் சிக்குவாரா என்று அவரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. பாளையங்கோட்டை சிறையில் உள்ள மகாராஜனை திருச்சி சிறைக்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.