பைக் மோதி காவலாளி பரிதாப பலி..

கோவை:  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 37)இவரது தந்தை மஞ்சப்பன் (வயது 61) இவர் திருப்பூர் பொன் நகரில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டி புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில் மஞ்சப்பன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் அமிர்தராஜ் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த சஞ்சய் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..