மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பரிதாப பலி..

கோவை மதுக்கரை பக்கம் உள்ள பாலத்துறை ,பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மகன் ஹரிதாஸ் ( வயது 32) )மினி ஆட்டோ ஒட்டி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த உயரமான முருங்கை மரத்தின் கிளையை நேற்று வெட்டினார் .அப்போது வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது விழுந்தது .இதில் உயர் மின் அழுத்த கம்பி ஹரிதாஸ் மீதுபட்டுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து மதுக்கரை போலீசில் அவரது அண்ணன் சக்திவேல் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..