இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!

கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ,நேரு நகரை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகா ( வயது 28) மணிகண்டன் என்ற மணி( வயது 24) செம்மேடு நாகராஜ் என்ற மனோஜ் ( வயது 21 )ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்ததால் 3பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் .இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் நேற்று மாலை வழங்கப்பட்டது.