போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலுள்ள 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானராஜ், இவரது மகன் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் ( வயது 25 )எட்டிமடை நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் இருவரும் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது..