கோவை போத்தனூரில் உள்ள அம்மன் புதூரை சேர்ந்தவர் வசந்தகுமார் ( வயது 24) டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் .பின்னர் அவர் திடீரென்று மயங்கினார். அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது ...

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி நீர்மட்டம் 23 அடியாக சரிந்தது .இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் வழியோரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு ...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கிலும், கோவை மாநகர் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் குமார் @அப்புச்சி (22) என்பவரை கோவில்பாளையம் காவல் துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் ...

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் ...

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ...

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒரு சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நியமன தேர்விலிருந்து விலக்கு ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, ...

சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக ...

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் ...

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அறிமுகமானார். இது மேலும், இந்த போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.இந்திய அணியின் இடம் பிடிப்பதற்காக சர்பராஸ்கான் நீண்ட நாட்களாக உழைத்து ...