கோவையில் பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது..!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கிலும், கோவை மாநகர் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் குமார் @அப்புச்சி (22) என்பவரை கோவில்பாளையம் காவல் துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு குற்றவாளியான சந்தோஷ் குமார் @அப்புச்சி (22)- யை* குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212மற்றும் வாட்ஸ் அப் எண் 77081 -00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.