கோவை டாக்சி டிரைவர் மர்ம சாவு..

கோவை போத்தனூரில் உள்ள அம்மன் புதூரை சேர்ந்தவர் வசந்தகுமார் ( வயது 24) டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் .பின்னர் அவர் திடீரென்று மயங்கினார். அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..