உதகை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட குன்னூர் அருவங்காடு ஜெகதாள ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் எஸ் பி வேலுமணி உத்தரவின் பெயரில் நீலகிரி மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத், முன்னாள் ...

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன் தோஸ், வரவேற்பு உரையாற்றி அனைவரும் வாழ்த்தினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த வேட்பாளர் ...

நீலகிரி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் அருகில் குளத்துப் பிரிவு என்ற இடத்தில் காலை சுமார் 7.50 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். FST2பி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கோவையிலிருந்து இருந்து கர்நாடக மாநிலம் நொக்கனூர் நோக்கி வந்த KA10A8315 எண் ஈச்சர் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் இன்றுகாலை சுமார் 8.30 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென்று பரவியதால் எட்டு குடியிருப்புகள் எரிந்து சேதம் அடைந்தது. எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் குடியிருப்புகளில் அடிக்கடி தொடரும் தீ விபத்தால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். ...

திருச்சி மாநகரில் கடந்த 10 நாட்களாக மின்வெட்டு தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. அது எதனால் என்று அதிகாரி ஒருவர் கூறுகையில்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஒரு மாதமாக திட்டமிடப்பட்ட பராமரிப்பை மேற்கொள்ளாததால், நிலைமையை மோசமாக்குகிறது. அதிகரித்த மின் தேவை மற்றும் உயரும் வெப்பநிலை ஆகியவற்றின் கலவையானது மின்சார விநியோக ...

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகர், யூனியன் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் லக்ஷித் (வயது 16) அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மகன் சரவணன் (வயது 17) இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார்கள். நேற்று விடுமுறை என்பதால்  7 நண்பர்களுடன் ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர் ...

கோவை : கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுபாஷ் ( வயது 50) தொழில் அதிபர். இவர் கோவை சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுபாஷ் தனது காரை எடுத்துக் கொண்டு பெரியநாயக்கன்பாளையம் அருகே கே.பி. கார்டன் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தை பார்வையிட சென்றார். இந்த நிலையில் அவர் ...

கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடைநடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் . பின்னர் ...

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறையின் ஊழியா்கள் சுமாா் 200 பேரின் பங்களிப்பில், சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி வரையப்பட்டது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன், வாக்குப்பதிவு இலச்சினையுடன் இந்த ரங்கோலி அமைந்துள்ளது. மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வாக்காளா்கள் பங்கேற்கும் ...

கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக காரமடை காவல் நிலையத்தில் மனோஜ் குமார்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி மனோஜ் குமாருக்கு 5 ஆண்டு ...