நீலகிரி பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சத்தியமங்கலம் என பல பகுதிகளில் வாகன சோதனைகள் தீவிரம்.!!

நீலகிரி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் அருகில் குளத்துப் பிரிவு என்ற இடத்தில் காலை சுமார் 7.50 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். FST2பி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கோவையிலிருந்து இருந்து கர்நாடக மாநிலம் நொக்கனூர் நோக்கி வந்த KA10A8315 எண் ஈச்சர் டெம்போவில் வந்த அருண்குமார் வயது 30 என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 5,66,210 என்பவர் கொண்டு வருவது கண்டறியப்பட்டு மேற்படி தொகை பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது என்பதையும் மேற்படி தொகையை சத்தியமங்கலம் சார்நிலை கருவூலகத்தில் வைப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அனைத்து சோதனை சவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.