போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக காரமடை காவல் நிலையத்தில் மனோஜ் குமார்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி மனோஜ் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல் நிலைக் காவலர் கிருஷ்ண ராஜன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்..