வால்பாறை தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தீ விபத்து – 8 வீடுகள் எரிந்து சேதம்.!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் இன்றுகாலை சுமார் 8.30 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென்று பரவியதால் எட்டு குடியிருப்புகள் எரிந்து சேதம் அடைந்தது. எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் குடியிருப்புகளில் அடிக்கடி தொடரும் தீ விபத்தால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இச்சம்பவம் வால்பாறை பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..