தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு , தற்போதைய தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். ...
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். கடந்த 2018ஆம் ஆண்டு இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அவர், ‘உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு சாட்டிலைட் மூலம் எங்கள் கம்பெனி இடம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு எங்கள் கம்பெனி தயாராக உள்ளது. ...
சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை ...
சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்: அசோக்குமார் (அதிமுக): இதுவாக்கு ஜாலம் கொண்ட பட்ஜெட். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்கள். அது பட்ஜெட்டில் இல்லை. அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை பாதுகாத்து கண்காணிக்க ...
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கும், வங்கி சட்ட திருத்த மசோதா-2021க்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில ...
ஜே & கே இன் மகாராஜா ஹரி சிங்கின் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்கின் மகனுமான முன்னாள் ஜே & கே எம்எல்சி விக்ரமாதித்ய சிங் செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளை ...
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களின் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகிற மாா்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 96 வாா்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி ...
மனிதர்களை ஆவியாகும் குண்டுகளை உக்ரைன் மீது வீச ரஷியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கொடூரமான போர் நடைபெற்று வருகிறது என்பது உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் மனிதர்களை ஆவியாகும் ராக்கெட் குண்டுகளை ...
இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடியை இழந்த சினிமா திரைப்பட நடிகர் விக்னேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் அளித்த புகார் மனுவில் கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருப்பதாகவும். தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் ...
சென்னை: விமான நிலைய வளாகத்திற்குள் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில், ₹250 கோடி திட்டத்தில் 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம், மற்றும் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி, 2018ல் தொடங்கியது. இதன் பணிகள் வேகமாக நடத்தப்பட்டு திறப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆறுதளங்கள் கொண்ட இந்த வளாகத்தில் ...