கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ...

“தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும்” என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 22-ம் தேதி, 2022 – 2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...

திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர ...

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் ...

புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக ெசல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால ...

வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் ...

நடிகர் விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றியை நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அரசியலில் இயங்கி வருகிறார். ஆகஸ்ட் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 41) பில்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்.இவர் சரவணம்பட்டி பக்கம் உள்ள நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் கட்டிடம் கட்டி வருகிறார்.இதற்காக இங்குள்ள ஒரு அறையில் 37 சென்ட்ரிங் சீட்டுகள் வைத்திருந்தார்.அதை நள்ளிரவில் ஒரு ஆசாமி திருடும்போது அவரை கையும் களவமாக பிடித்து ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருராஜ்பான்சி. சூலூர் பக்கம் உள்ள மயிலம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 3மகள்கள் உள்ளனர்.இவரது மகள் சிந்து குமாரி (வயது 16) நேற்று மாலையில் இவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிந்து குமாரி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் ...

கோவை:திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அதன் மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஓசூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தமிழக மாநில செயலாளர் சு.வே.ராமன் விநாயகர் சதுர்த்தி விழாவை ...