கோவையில் 90 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..

கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் உள்ள ஞான சுந்தரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி, இவரது மனைவி தனலட்சுமி ( வயது 90) இவர் நேற்று அவரது வீட்டில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மகன் மாசாணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.