கோவை: ”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசியல் ரொம்ப ‘காஸ்ட்லி’யாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் உள்ளாட்சி தேர்தல் இறுதி நாள் பிரசாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தேர்தலில் தி.மு.க., 2,000 ரூபாய் பணம், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு ‘ஹாட்பாக்ஸ்’ ஆகியவற்றை கொடுத்து உள்ளாட்சியை பிடித்து ...

சூலுார் : அரசூர் அருகே, அவிநாசி ரோட்டில் மேலும் இரு இடங்களில் மேம்பாலம் கட்டுவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். சாலைப் போக்கு வரத்து உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்:544) ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டது. கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பல இடங்களில் ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 10 மணி முதல், வரும் 19-ம் தேதி ...

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். முதல் பாகமாக ...

எங்கள் நாட்டு மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது குஷி நகர். இங்கு நௌரங்கியாவில் கோலாகலமாக திருமண விழா ஒன்று நடைபெற்றது..இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்களும், சிறுமிகளும் நேற்று இரவு அங்கிருந்த கிணற்றின் பலகையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அந்த பலகை உடைந்ததால் அதில் அமர்ந்திருந்த பெண்களும், குழந்தைகளும் கிணற்றுக்குள் விழுந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் ...

மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ...

புதுடில்லி: நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் எனக்கூறி இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ...

சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள ...

குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பொருட்களின் தரம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அவை கடுமையாக நோக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை. குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று ...