கோவை டாஸ்மாக் கடை முன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!

கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள தடாகம் ரோடு கோயில்மேடு சந்திப்பில் டாஸ்மாக் கடை ( என் 1602) உள்ளது. இந்த கடையின் முன் நேற்றிரவு ஒரு ஆண் பிணம் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. இது குறித்து கடை சூப்பர்வைசர் கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 50 வயது இருக்கும் அவர் யார்.? என்று அடையாளம் தெரியவில்லை இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.