கோவை 10ம் வகுப்பு மாணவர்கள் திடீர் மாயம்..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் வேலாயுத நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அஜய் ( வயது 15) இடிகரை, தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கவுரி ஈஸ்வரன் (வயது 15) இவர்கள் இருவரும் இடிகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி விட்டார்களாம் .இதை ஆசிரியர்கள் கண்டித்தனர். அவர்களது பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் இருவரும் கடந்த 2- தேதி திடீரென்று மாயமாகிவிட்டனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய், கவுரி ஈஸ்வரன் ஆகியோரை தேடி வருகிறார்கள்..