நள்ளிரவில் சாலையில் சுற்றி திரிந்த இளம்பெண் – ரோந்து போலீசார் மிட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு.!!

சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண் சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் இரவு ரோந்து பணியில் இருந்து போது வீட்டார் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனியாக சுற்றித் திரிவதாக அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்த போது தனது பெயர் மாயா வயது 25 ஊர் பெயர் கேட்டபோது ஊர் பெயர் தெரியாது விலாசம் தெரியாது எனக் கூறிவிட்டார். அவர் நலனை கருத்தில் கொண்டு ரோந்து காவல் கூடுதல் பொறுப்பாளர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் வேலாயுதம் காவலர் ஆனந்தன் ஆகியோரை உதவிக்கு வரவழைத்து கருணை உள்ளங்கள் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் பாலாஜி நந்தா ஆகியோர்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு அரசு மனநல காப்பகம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து சுவையான சுடச்சுட டீ மற்றும் சுவையான உணவும் வழங்கப்பட்டது