சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மூதாட்டி கருகி பலி..!

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் .இவரது மனைவி பங்கஜம் (வயது 62) இவர் நேற்று காலையில் எழுந்து சமையலறைக்கு சென்றார். அங்கு சுவிட்ச் போடும்போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது கணவர் சங்கரநாராயணன் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சமையலறையில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது..