10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – போக்சோவில் பெரியப்பா கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15- வயது சிறுமி .10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு பகுதியில் உள்ளது தனது சொந்த பெரியப்பா ரவி (வயது 52) என்பவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை ரவி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அவரது பெற்றோர்களிடம் அந்த சிறுமி கூறி அழுதார். இதுகுறித்து துடியலூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னம் விசாரணை நடத்தி பெரியப்பா ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தார். ரவி அங்குள்ள மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.கைது செய்யப்பட்ட ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..