வீட்டின் மேற்கூரையை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் வைரமுத்து முருகன் (வயது 33) ஜே.சி.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி, மகனுடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார் .மூத்த மகன் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டார் . இந்த நிலையில் நேற்று யாரோ சமையல் அறையின் மேல் கூரையை உடைத்து உள்ளே இறங்கி வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் பணம் ரூ. 36 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து வைரமுத்து முருகன் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..