உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு… சென்னை என்ஜினியர் கோவை ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை..!!

கோவை:சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் ( வயது 67), வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் .இவரது மகன் சீனிவாசன் (வயது 36) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கனடாவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார். ஆனாலும் அவர் மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் அதிலிருந்து மீள்வதற்காக சீனிவாசன் கடந்த 22ஆம் தேதி கோவைக்கு வந்து லட்சுமி மில் சிக்னலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார் .இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 25ஆம் தேதி தற்கொலை செய்வதற்காக ஓட்டல் அறையில் வைத்து விஷம் குடித்தார். சிறிது நேரம் கழித்து கழிவறைக்கு சென்ற சீனிவாசன் மயங்கி விழுந்து இறந்தார்.வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மறுநாள் மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அங்கு சீனிவாசன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வரைந்து சென்று பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒட்டல் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலை செய்து கொள்ளும் முன் சீனிவாசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் எனக்கு கடுமையான மன உளைச்சல் உள்ளது .அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.நான் தனிமையில் தவிக்கிறேன் என்னால் இந்த உலகத்தில் இனி வாழ முடியாது .எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் .என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.