கோவிலில் வடமாநில பூசாரி தூக்குப் போட்டு தற்கொலை..

கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மகன் உத்தம் குமார் ( வயது 17) இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சோமனூருக்கு வந்தார். அங்குள்ள சேடர்பாளையம் ராம் தேவ் சேவா சங்க ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவரது உறவினர் ராஜேந்திர குமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..