தாய்க்கு வாட்ஸ்- அப்பில் வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை கணபதி, மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19 இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன் தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு சென்றார்.அந்த அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. உடனே அவர் கதவை திறந்து பார்த்தபோது கவுசல்யா தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தை உதவியுடன் கவுசிகாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது :-கவுசல்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது தாயாருக்கு வாட் ஸ்-அப்பில் ஒரு வீடியோ அனுப்பி உள்ளார் .அதில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார் .இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.