சாலையில் நின்றிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதி இளம்பெண் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள வேடப்பட்டி, சுகர்கேன் நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சிந்து ( வயது 23 ) நேற்று இவர் அவிநாசி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி முன் எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது தாயார் பூர்ணிமா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் லாரி டிரைவர் திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.