கோவை லாட்ஜில் திருச்செந்தூர் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஹை ஸ்கூல் புதூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது . சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த வாலிபர் மின்விசிறியில் நைலான் கயிற்றைக் கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது .இது குறித்து ஆலந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பக்கம் உள்ள தளவாய்புரம்,கந்தம்மன் நகரை சேர்ந்த சந்தோச பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது.இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை .இது குறித்து அவரது அண்ணன் தங்கப்பாண்டி ஆலந்துறை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.