நீலகிரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதகை நகர செயலாளர் வாக்கு சேகரிப்பு..!

உதகை: உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஆர் கே புரம், மகாத்மா காலனி, ராமகிருஷ்ண மடம், பாப்ஷா லையின், ஆகிய பகுதிகளில் அதிமுக நகரச செயலாளர் க. சண்முகம் தலைமையில் கிளை கழகச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கிளை பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகி சந்திரன், உதய், சண்முகம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. உடன் அவை தலைவர் சிவக்குமார், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர், மாநிலத் துணைச் செயலாளர் கண்ணபிரான், நகரப் பொருளாளர் சாந்தகுமார், அம்மா பேரவை நகர செயலாளர் திவாகர், வர்த்தக அணி இணைச் செயலாளர் பவித்ரா ரவி, மாணவர் அணி நகர செயலாளர் தீட்டுக்கள் சுரேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நகர செயலாளர் கார்த்திக், மாணவர் அணி தலைவர் பிரதீப், கிளைச் செயலாளர் சதீஷ் வினோத், வாஜித் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ர.விஜய் (நகர செயலாளர் உதகை தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கழக நிர்வாகிகள் என கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.