காதலை பெற்றோர்கள் கண்டித்ததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம், தெற்கு ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி ( வயது 20) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நாகரத்தினம் என்பவரை காதலித்து வந்தாராம்.இதை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விஜயலட்சுமி கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் நேற்று அவரது தாயார் சாந்தி தனது மகனுக்கு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார் .விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.இந்த நிலையில் விஜயலட்சுமி அவரது தாயாருக்கு செல்போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்..பிறகு செல்போனில் எதுவும் பேசவில்லை.சந்தேகம் அடைந்த தாயார் சாந்திவீட்டில் வந்து பார்த்தபோதுவிஜயலட்சுமி சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்..இது குறித்து தாயார் சாந்தி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.