கோவை வியாபாரி வீட்டில் நகை,பணம் கொள்ளை..!

கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள வேளாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 55) வியாபாரி.நேற்று முன் தினம் இரவில் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ மாடியில் ஓடுவது போன்று சத்தம் கேட்டது. ‘அவர் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. அதில் இருந்த 51 கிராம் தங்க நகைகள் பணம் ரூ. 42 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சஞ்சீவ் குமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.