5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு…

கோவை கம்பட்டி காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மனைவி ஜெனிபர் (வயது 22) இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது .நேற்று கணவன்- மனைவி இருவரும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கடைவீதி காவல் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.