நடுரோட்டில் சத்தமிட்டபடியே நிர்வாணமாக ஓடிய பெண்- கோவையில் பரபரப்பு .!!

கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க ஒருபெண் நிர்வாணமாக சத்தமிட்டபடியே நடுரோட்டில் ஓடினார். இதை பார்த்த அங்கே நின்று கொண்டிருந்தவர்கள், கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் பின்னால் துணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்த பெண் போலீசார் ஓடிச் சென்று துணிகளால் அந்தப் பெண்ணின் உடலை மறைத்து,போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அந்த பெண் உடல்நலக் குறைவு காரணமாக அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிடுவதால் திடீரென்று இதுபோன்று செய்து விடுவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்களுக்கு போலீசார் தகுந்த அறிவுரை வழங்கியவுடன் இது போன்ற பெண்களை வெளியே விடக்கூடாது என தெரிவித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரத்தினபுரி பகுதியில் ஒரு மணி நேரம் கடும் பரபரப்பு ஏற்பட்டது.