அன்னூர் அருகே திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்- 13 பேர் படுகாயம்..!

கோவை மாவட்டம் அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே நேற்று ஆட்கள் ஏற்றிகொண்டு வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் வேனில் பயணம் செய்த புளியம்பட்டியை சேர்ந்த தங்கமணி ( 36 ) மாரப்பன் ( 76) கிருஷ்ணசாமி (44) பாண்டியம்மாள்( 32 ) சரஸ்வதி (49 )பழனிச்சாமி ( 47 )சின்னசாமி ( 54 ) பெத்த நாயக்கர் ( 60 ) சின்னசாமி (70) மற்றொரு பழனிச்சாமி ( 38 )முத்துசாமி ( 59)மோகனா (29 )ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் புளியம்பட்டி ஆலம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் கிருஷ்ணசாமி ( 44 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.