பைக் மீது டிப்பர் லாரி மோதி மகன் கண் முன் தந்தை பரிதாப பலி..

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 35) இவர் நேற்று தனபால் பிரதீசுடன் (வயது 11) இடையர்பாளையம் பொன்னாகாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆயில் கம்பெனி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சந்திரசேகர் அதே இடத்தில் இறந்தார் .மகன் பிரதீஸ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .மகன் கண் முன் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர்.