காதல் தோல்வி: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுப்புராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கதிரேசன் ( வயது 20) இவர் கடந்த 3 மாதங்களாக கோவை ,புது சித்தா புதூர் ரங்கநாதன் வீதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கதிரேசன் வீட்டில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த கதிரேசன் அவர் தங்கி இருந்த அறையில் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.