சிறுமுகை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது..!

சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று அங்குள்ள வங்கி அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சிறுமுகை எஸ். ஆர் .எஸ். நகர் ( கிழக்கு) பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மகன் சித்திக் ( வயது 32 )என்பது தெரிய வந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..