பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 11 பேர் உயிரிழப்பு – டெல்லியில் துயரம்..

டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அலிப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் ஒரு பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு முதல் கடுமையாக போராடினர். பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் உள்ளே ரசாயன வேதிப்பொருட்கள் அதிகம் இருந்ததால் தீயை அணைக்க சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர விபத்தில் முதலில் நேற்று வரை 7 பேர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியான தகவலின் படி எதுவரை உயிரிழப்பு 11ஆக அதிகரித்து உள்ளது. ரசாயன தீ விபத்து என்பதால் உடல்கள் முழுவதும் எரிந்துள்ளன. இதனால் இறந்தவர்களின் உடல் அடையாளம் காணுவது கடினமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் கூடலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உயிரிழந்த உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.