கோவை பப்பில் போதையில் ரகளை செய்த வாலிபர்- வீடியோ வைரல்..!

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் போதையில் கார் மீது ஏறி அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல மெல்ல கோவையை ஆட்கொண்டு வருகிறது. அதன் விளைவாக கோவையின் பல்வேறு இடங்களிலும் பப்புகள், கிளப்புகள் வர துவங்கியுள்ளன.

இங்கு வந்து செல்லும் இளம் பெண்களும், ஆண்களும் போதை தலைக்கேறி அவ்வப்போது ரகளையில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், கோவையில் பப் ஒன்றில் மது போதையில் வாலிபர் ஒருவர் கார் மீது ஏறி அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அவரை பப்பில் உள்ள பவுன்சர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். தற்போது இது குறித்த வீடியோ ஒன்றி வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இதேபோன்று மதுபோதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.