பிரபல ஸ்கூட்டர் திருடன்… கையும் களவுமாக சிக்கினான்..!

கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் திருமுருகன் ( வயது 40 )இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது ஸ்கூட்டரை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது விதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன் நிறுத்திவிட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஒரு ஆசாமி ஸ்கூட்டரை திருடி கொண்டிருந்தார். அவரை கையும் களவமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் கோவை ராமநாதபுரம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்த நாகராஜன் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் மீது .ஏற்கனவே சிங்காநல்லூர் ,உக்கடம், காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.