திருடிய மொபட்டில் ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்- மடக்கி பிடித்த வண்டி உரிமையாளர்..!!

கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 54). ரியல் எஸ்டேட்
தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடை முன்பு
தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை
காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி
அடைந்த பக்ருதீன் மொபட்டை திருடி சென்ற நபரை தேடினார்.
அப்போது திருட்டு போன சிறிது நேரத்தில் அவரது மொபட்டில் வாலிபர் ஒருவர்
சுங்கம் பைபாஸ் ரோட்டில் ஜாலியாக வந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து
உடனே சுதாரித்த பக்ருதீன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி
பிடித்தார்.
பின்னர் அந்த வாலிபரை உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ்
விசாரணையில், மொபட்டை திருடியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
கைலாசம்பாளையத்தை சேர்ந்த ராஜூ (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து
போலீசார் வாக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்து கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது திருச்செங்கோடு போலீஸ்
நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.