கோவை நகை பட்டறையில் 7குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – உரிமையாளர் மீது வழக்குபதிவு..!

கோவை:மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் மிந்து ஹாசி.இவர் கோவை காந்தி பார்க் சுக்கிரவார் பேட்டையில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தி இருப்பதாக கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது .அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 16 வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்களை வேலைக்கு பணி அமர்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக அந்த பட்டறையை நடத்தி வந்த மிந்து ஹாசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.