குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி..

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ராம்கி ( வயது 35) தச்சு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது வீட்டின் மாடியில் குடிபோதையில் நடந்து கொண்டே செல்போன் பேசினாராம். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தீனா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.