வாட்ஸ் அப்பில் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை வடவள்ளி பக்கம் உள்ள நவாவூர்,மருதாபுரத்தைச் சேர்ந்தவர் நிர்மல்ராஜ். இவரது மனைவி நந்தினி ( வயது 25) பிஎஸ்சி பட்டதாரி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் . 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி குடும்பத்தார் சமரசம் செய்து வைத்தனர் .இந்த நிலையில் நேற்று தனது கணவருக்கு நந்தினி வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வடவள்ளி போலீசில் தாயார் தனலட்சுமி புகார் செய்தார். .உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..