ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .வங்கிக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. அதை யாரோ திருடி சென்று விட்டனர் . அதன் மதிப்பு ரூ 10 லட்சத்து 94 ஆயிரத்து 765 இருக்கும். இது குறித்து சென்னையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அர்ஜுனன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.