கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வாலிபர் சாவு ..!

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டை சேர்ந்தவர் ராஜன் இவரது மகன் கவுதம் ( வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று கணுவாய் பன்னிமடை -வரப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மயங்கி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்து விட்டார் . திடீர் மாரடைப்பால் அவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து அவரது தாயார் கிருஷ்ணவேணி தடாகம் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..