குப்பைகளை எரித்து கொண்டிருந்த போது தீயில் கருகி சிறுமி பரிதாப பலி..

கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தர். .கூலி தொழிலாளி. அவரது மகள் ரிதன்யா ( வயது 14) இவர் வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரிதன்யாவின் ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக மதுக்கரை ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.